மேல் மாகாணத்தில் பாடசாலைகள் மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் பெப்ரவரி 15ம் திகதி முதல் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் அனுமதியுடன் மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“மேல் மாகாணத்தில் அதிக ஆபத்துள்ள பகுதிகளை தவிர்ந்து ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை பெப்ரவரி 15ம் திகதி முதல் மீள திறப்பதற்கு கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் மொத்தம் 590 பாடசாலைகளில் 589 பாடசாலைகளை மீள திறக்க குழு பரிந்துரைத்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் மொத்தம் 446 பாடசாலைகளில் 442 பாடசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பெப்ரவரி 15 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டுமானால், சுகாதார அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும்.
கொழும்பு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இந்த வாரம் நடைபெற உள்ளது, அதன் நிலை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
