சட்டத்தின் பிடியில் இருந்து ராஜபக்சர்கள் தப்ப முடியாது! அநுர அரசு திட்டவட்டம்
ராஜபக்சர்கள் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்ப முடியாது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
அநுர அரசு
"கொழும்பில் இருந்து தங்காலைக்குக் குடியமரச் சென்றுள்ள மகிந்த ராஜபக்சவும், அவரின் குடும்பத்தினரும் அங்கிருந்து கொண்டு அரசியல் இலாபம் தேடும் வகையில் ஒப்பாரி வைக்கின்றனர்.
அவர்களின் ஒப்பாரியால் நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்த முடியாது. ஒப்பாரி வைத்து தப்பிப்பிழைக்கலாம் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல், மோசடிகள் என ராஜபக்ஷக்கள் இழைத்த குற்றங்களுக்குத் தண்டனை கிடைத்தே தீரும்.
மீண்டும் மொட்டுக் கட்சியின் ஆட்சி மலரும் என்று 'குட்டி ராஜபக்ச' நாமல் கனவு காண்கின்றார். அவர் இழைத்த குற்றங்களை அவர் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை" - என குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 11 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
