சட்டத்தின் பிடியில் இருந்து ராஜபக்சர்கள் தப்ப முடியாது! அநுர அரசு திட்டவட்டம்
ராஜபக்சர்கள் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்ப முடியாது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
அநுர அரசு
"கொழும்பில் இருந்து தங்காலைக்குக் குடியமரச் சென்றுள்ள மகிந்த ராஜபக்சவும், அவரின் குடும்பத்தினரும் அங்கிருந்து கொண்டு அரசியல் இலாபம் தேடும் வகையில் ஒப்பாரி வைக்கின்றனர்.

அவர்களின் ஒப்பாரியால் நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்த முடியாது. ஒப்பாரி வைத்து தப்பிப்பிழைக்கலாம் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல், மோசடிகள் என ராஜபக்ஷக்கள் இழைத்த குற்றங்களுக்குத் தண்டனை கிடைத்தே தீரும்.
மீண்டும் மொட்டுக் கட்சியின் ஆட்சி மலரும் என்று 'குட்டி ராஜபக்ச' நாமல் கனவு காண்கின்றார். அவர் இழைத்த குற்றங்களை அவர் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை" - என குறிப்பிட்டுள்ளார்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri