அரசாங்கத்தின் பிரச்சினை அந்நிய செலாவணி கையிருப்பு இன்மையேயாகும் - ரணில்
அரசாங்கத்தின் மெய்யான பிரச்சினை அந்நிய செலாவணி கையிருப்பு இன்மையேயாகும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு உள்ள பிரதான பிரச்சினை உரத்தில் இரசாயனம் கலந்திருப்பதல்ல உண்மையில் வெளிநாட்டு செலாவணி கையிருப்பில் இல்லாமல் போனமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீடியோ காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக ஊடகங்களுடன் பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனியாக சேதன பசளையை மட்டும் பயன்படுத்துவது உற்பத்தியை வரையறுக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இரசாயன உர பயன்பாட்டை தடுப்பதற்காக அவற்றுக்கு தடை விதித்து அதனால் எற்படும் அரிசி தட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதாக்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த அரிசிக்கும் இரசாயன உரமே பயன்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் 15 வீதமான விவசாய நிலங்களில் மட்டுமே சேதன பசளை பயன்படுத்தப்படுகின்றது என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
