யாரையும் வெற்றிலைபாக்கு வைத்து அழைக்க வேண்டியதில்லை: சாணக்கியன் காட்டம் (Video)
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை தீர்ப்பதாகயிருந்தால் குழந்தைத்தனமான செயற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் கைவிட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நேற்று (25.12.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து பேசுவதற்கு ஜனாதிபதியை வெற்றிலைபாக்கு வைத்து அழைக்க வேண்டியதில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கம்
மேலும், மிருகவதை சட்டங்களை கடுமையாக கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம்
முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



