ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள்! - பிரதமரும், ஜனாதிபதியும் தீர்வு வழங்குவார்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் மற்றும் குழப்ப நிலைமைகளுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தீர்வு வழங்குவார்கள் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் சில கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் விரைவில் தீர்வு வழங்குவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பல கட்சிகளைக் கொண்ட கூட்டணி எனவும் இதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றை ஒன்று விமர்சனம் செய்வதனை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சிகள் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடாத்த முடியும் என்ற போதிலும் ஆளும் கட்சியின் சில கூட்டணி கட்சிகளுக்கு தனித்து பயணிக்க முடியாது என்பதனை அவர்கள் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan
