அடுத்த வாரமளவில் அரிசியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
அடுத்த வாரம் முதல் அரிசியின் விலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாக அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நெல் அறுவடை இடம்பெறுவதனால் இவ்வாறு அரிசியின் விலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் பி.கே.ரஞ்சித் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரங்களில் அரிசியின் விலையில் அதிகரிப்பு காணப்பட்டது. நெல் தட்டுப்பாடு மற்றும் நெல்லின் விலை அதிகரித்தமை என்பன காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டது.
எவ்வாறாயினும் வவுனியா மற்றும் வடமேல் மாகாணங்களில் நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. எனவே, எதிர்வரும் வாரத்தில் அரிசியின் விலை குறைவடையும் என அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
