அடுத்த வாரமளவில் அரிசியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
அடுத்த வாரம் முதல் அரிசியின் விலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாக அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நெல் அறுவடை இடம்பெறுவதனால் இவ்வாறு அரிசியின் விலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் பி.கே.ரஞ்சித் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரங்களில் அரிசியின் விலையில் அதிகரிப்பு காணப்பட்டது. நெல் தட்டுப்பாடு மற்றும் நெல்லின் விலை அதிகரித்தமை என்பன காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டது.
எவ்வாறாயினும் வவுனியா மற்றும் வடமேல் மாகாணங்களில் நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. எனவே, எதிர்வரும் வாரத்தில் அரிசியின் விலை குறைவடையும் என அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
