எரிவாயுவின் விலை குறைகிறது! லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப இவ்வாறு லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு விலை அதிகரிப்பு
இதேவேளை, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் எரிவாயுவின் விலையை லிட்ரோ நிறுவனம் அதிகரித்திருந்தது.
இதன்படி, இதன்படி, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
அத்துடன், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.
விலை அதிகரிப்பிற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 4610 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1850 ரூபாவாகும்.
மேலும், புதிய விலை திருத்தத்திற்கு அமைய 2.3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 860 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
