ஜப்பானிய பிரதமரை சந்தித்த ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கும் (Fumio Kishida)இடையிலான சந்திப்பு இன்று (28) பிற்பகல் நடைபெற்றுள்ளது.
டோக்கியோவிலுள்ள அகசகா மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நெருங்கிய உறவுகளை மேலம் வலுப்படுத்தல் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
ஜப்பானிய பேரரசருடன் சந்திப்பு

இதேவேளை ஜப்பானிய பேரரசர் நருஹிதோவிற்கும் ஜனாதிபதி ரணிலுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
டோக்கியோவிலுள்ள பேரரசரின் உத்தியோகபுர்வ இல்லமான இம்பீரியஸ் அரண்மனையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan