ரணிலின் பரிந்துரையை எதிர்பார்க்கும் ஜனாதிபதி
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள வேளையில் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்ற கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக் காலத்தை நீடிக்க நிதியமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரையை ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30 ஆம் திககியுடன் பதவிகாலம் முடிவடைகிறது
நெருக்கடியை நிர்வகிப்பதற்கு கலாநிதி நந்தலால் வீரசிங்க கொண்டு வந்த கொள்கைகளுக்காக பொருளாதார வல்லுனர்களால் பாராட்டப்பட்டார், மேலும் அவரது பதவிக்காலம் ஜூன் 30 ஆம் திககியுடன் முடிவடைகிறது.
இந்தப் பதவியில் நீடிக்கத் தயாராக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அண்மையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார். தற்போது நாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துரையாடி வருகின்றனர்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேலும் 5.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இன்று அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri