உயரும் எரிபொருள் விலை! பொதுமக்களுக்காக பிரித்தானிய அரசு சிறப்பு திட்டம்
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆதரவை வழங்க அரசு பரிசீலித்து வருவதாக பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
லண்டனில் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நிதியுதவித் திட்டம்
எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டு வரம்பிற்குள் வராத, வெப்பமூட்டும் எண்ணெய்யைநம்பியிருக்கும் சுமார் 1.5 மில்லியன் குடும்பங்களுக்கு அடுத்த வாரம் ஒரு நிதியுதவித் திட்டம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போது நிலவும் ஈரான் - இஸ்ரேல் மோதலால் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

எனினும், கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் போரின் போது வழங்கப்பட்டது போன்று அனைத்து குடும்பங்களுக்குமான பொதுவான நிதியுதவியைத் தவிர்த்து, மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு மட்டுமே இந்த முறை உதவி வழங்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டின் கடன் சுமை அதிகமாக இருப்பதால், மிகவும் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், எரிபொருள் நிறுவனங்கள் தேவையற்ற இலாபமீட்டுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
ஈரானின் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இடைக்கால அரசை வழிநடத்தத் தயார்! இளவரசர் ரெசா பஹ்லவி அதிரடி அறிவிப்பு
அமெரிக்க- இஸ்ரேல் தாக்குதலில் முற்றாக முடங்கிய ஈரான்: உயிரிழப்பு 429-ஆக உயர்வு! வெளியான புள்ளிவிவரங்கள்
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri