தலதா மாளிகையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி (Photos)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை மாளிகையின் தியவடன நிலமே திலங்க தேலபண்டார வரவேற்றுள்ளார்.

புத்தரின் புனித தந்தம் வைக்கப்பட்டுள்ள தலதா மாளிகையின் மேல் மாடியில் உள்ள குடிலுக்கு சென்று ஜனாதிபதி மலர்களை வைத்து வழிபாடுகளில் ஈடுபட்ட, பௌத்த பிக்குமாரிடம் ஆசி பெற்றுக்கொண்டார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் தலதா மாளிகையில் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று அங்குள்ள நினைவு பதிவு புத்தகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கண்டி மாநகர மேயர் உள்ளிட்டோரும் தலதா மாளிகைக்கு சென்றிருந்தனர்.

இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்க முதல் முறையாக தலதா மாளிகைக்கு விஜயம் செய்துள்ளார்.
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam