பாடசாலைகளில் கோவிட் கொத்தணிகள் உருவாகும் சாத்தியம்! டொக்டர் ஹேமந்த ஹேரத் மறுப்பு
பாடசாலைகளில் கோவிட் கொத்தணிகள் எதுவும் இதுவரையில் உருவாகவில்லை என சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பளார் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் நான்கு மில்லியன் பாடசாலை மாணவ,மாணவியரில் சுமார் 400 முதல் 500 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு சூழலிலிருந்தே அதிக எண்ணிக்கையிலானவர்கள் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை மாணவ, மாணவியருக்கு இடையில் கோவிட் தொற்று வேகமாக பரவவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் குறித்த சுகாதார வழிகாட்டல்கள் உரிய முறையில் பாடசாலைகளில் பின்பற்றப்பட்டால் கொத்தணிகள் உருவாகும் சாத்தியம் கிடையாது எனவும் டொக்டர் ஹேமந்த ஹேரத் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலைகளில் கோவிட் சுகாதார வழிகாட்டல்கள் உரிய முறையில் அமுல்படுத்தப்படுவதில்லை என ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022