‘‘லசந்தவின் மரணம் குறித்து முன்பே அறிந்திருந்த பொலிஸ்மா அதிபர்’’

Srilanka Police Kalutara Scotland
By Dhayani Nov 26, 2021 04:51 PM GMT
Report

பொலிஸ் காவலில் உயிரிழந்த லுனுவிலகே லசந்தவின் மரணம் சட்டவிரோதமான படுகொலை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா மா அதிபருக்குத் தெரிந்திருந்த நிலையிலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏறக்குறைய ஒன்றரை தசாப்தங்களாக இலங்கை பொலிஸாருக்கு வழங்கிய பயிற்சியை, இனி வழங்கப்போவதில்லை என ஸ்கொட்லாந்து பொலிஸ் அறிவித்து இரண்டு நாட்களுக்குள், லுனுவிலகே லசந்த அல்லது டிங்கரிங் லசந்த இன்று காலை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை முயற்சி தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்த நிலையிலும் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

"இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உடனடியாக இது குறித்து பொலிஸ்மா அதிபருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அறிவித்தார்.

" மேலும், இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் ஆணையாளர், ஆணைக்குழுவின் முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும் இதுத் தொடர்பில் அறிவித்துள்ளார். ஏனென்றால் அவர் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் (CHA) தலைவராக செயற்படுகின்றார்.

இன்றைய தினம் களுத்துறை, தியகம பகுதியில், சந்தேகநபருக்கு சொந்தமான கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றை தேடிச் சென்றபோது சந்தேகநபர் குறித்த கைத்துப்பாக்கியால் பொலிஸ் அதிகாரிகளை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில், பொலிஸாரின் பதில் தாக்குதலில் குறித்த சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் இரு பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க தவறியமை குறித்து விளக்கமளிக்குமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ராஜீவ் அமரசூரியவின் கையொப்பத்துடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் நிலைமைக் காரணமாக இலங்கை பொலிஸாருக்கு பயிற்சியைத் தொடர வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளதாக, ஸ்காட்லாந்தின் பொலிஸ் தலைவர் இயன் லிவிங்ஸ்டன் நவம்பர் 24ஆம் திகதி உயர் பொலிஸ் அதிகாரிகளின் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக அதிகரித்துள்ள கைதுகள், தடுப்புக்காவல் மரணங்கள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இலங்கை பொலிஸாருக்கு ஸ்காட்லாந்து பொலிஸாரினால் வழங்கப்படும் பயிற்சியை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US