கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் பலி!
முல்லைத்தீவு – நீராவிப்பிட்டி பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ம் திகதி நீராவிப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற குடும்பத்தகராறு கத்திக்குத்தில் முடிந்துள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்கான முகமட் றஜாஜ் (வயது-39) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று (19) உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri
