யாழில் நடந்த துயரச் சம்பவம் - பிள்ளைகளை அழைக்க பாடசாலை சென்ற தாய் பரிதாபமாக மரணம்
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீசாலை வடக்கை சேர்ந்த 52 வயதான சிறீதரன் செல்வராணி என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மீசாலை ஐயா கடையடிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் மீது முச்சக்கரவண்டி மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
படுகாயம் அடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலையிலுள்ள பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான சென்று மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்று முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த முச்சக்கரவண்டி தொடர்பான தகவல் தெரித்தால் தமக்கு வழங்குமாறு சாவகச்சேரி பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 14 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
