பிறந்து ஏழு நாட்களேயான கைக்குழந்தையை விற்ற இளம் தாய்
பிறந்து ஏழு நாட்களேயான கைக்குழந்தையை 50,000 ரூபாவுக்கு விற்ற இளம் தாயொருவர் நேற்று (26.09.2022) மாலை அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு உதவியதாக கூறப்படும் அரச வைத்தியசாலை தாதி ஒருவரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குழந்தையை விற்பனை செய்த 21 வயது பெண்

மல்வத்து ஓயா ஆற்றங்கரையில் உள்ள குடிசை ஒன்றில் வசித்து வந்த கெப்பிட்டிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே குழந்தையை விற்பனை செய்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக, தமது பெண் குழந்தையை வாஹல்கட பிரதேசத்தில் உள்ள தம்பதியருக்கு அவர் விற்பனை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இன்னும் சிலரும் கைது
அத்துடன் தமக்கு ஏற்கனவே ஒன்றரை வயது மகனும் இருப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இன்னும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 22 மணி நேரம் முன்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri