நாவலப்பிட்டியில் காணாமல்போன பாடசாலை மாணவிகள் கொழும்பில் கண்டுபிடிப்பு
க.பொ.த சாதாரணத்தர பரீட்சை முடிந்து கடந்த 15ஆம் திகதி முதல் நாவலப்பிட்டியில் இருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டு மாணவிகளும் கடுவெலயில் உள்ள அவர்களது உறவினர்கள் வீட்டில் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமிகள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொழும்புக்கு (Colombo) பயணித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு
இந்தநிலையில் அவர்கள் இருவரும் கடந்த 15ஆம் திகதி இரவு கடுவெலயில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். இதன்போதே அவர்கள் தொடர்பான தகவல் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

முன்னதாக, கினிகத்ஹேனவில் உள்ள பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற க.பொ.த சாதாரணத்தர பரீட்சை முடிந்து இந்த சிறுமிகள் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து அம்பகமுவ தேசிய பாடசாலையில் பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரண்டு சிறுமிகளின் பாதுகாவலர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri