காணாமல்போன திருகோணமலை கடற்றொழிலாளர்களைத் தேடும் உலங்கு வானூர்தி
திருகோணமலை(Trincomalee), சல்லிக் கடற்கரையில் இருந்து கடந்த 21 ஆம் திகதி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல்போயுள்ள இரண்டு கடற்றொழிலாளர்களைத் தேடி இன்று காலை முதல் விமானப் படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தி தேடுதலை ஆரம்பித்துள்ளது.
இந்தத் தேடுதல் நடவடிக்கையில் கடற்படை அதிகாரி ஒருவரும் இணைந்துள்ளார் என்று கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு கூறியுள்ளது.
விமானப்படையின் உதவி
சீரற்ற காலநிலையால் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் வெற்றி பெறாத நிலையில் தற்போது விமானப்படையின் உதவி பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
சல்லியைச் சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் (வயது 44), முருகையா சுயாந்தன் (வயது 32) ஆகிய இரு கடற்றொழிலாளர்களே காணாமல்போயுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |