நாட்டிற்குள் நுழைந்த போர்க்கப்பல்! வெளியானது காரணம்:செய்திகளின் தொகுப்பு
இந்திய கடற்படையின் போர்க்கப்பலான 'ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி' மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (13) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே நட்புறவை வளர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த போர்க்கப்பலானது 143 மீட்டர் நீளமும், மொத்தம் 390 கப்பல்களைக் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரி கெப்டன் எம்.எம்.தோமஸ் ஆவார்.
இந்த கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படும் போது மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு,