இன்று இரவு மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுமா?
புதிய இணைப்பு
நாட்டின் சில பாகங்களில் இன்றிரவும் மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றும் ஒரு மணிநேர மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் இன்றையதினம் இரவு மின் துண்டிப்டை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இன்று விடுமுறை தினம் என்பதால், மின்சாரத்துக்கான கேள்வி குறைந்த அளவில் உள்ளமையால், இரவு வேளையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், உறுதியாக குறிப்பிடமுடியாதுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.