தாமதமாகும் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட மீளாய்வு
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டத்தின் அடுத்த மீளாய்வு தாமதமாகும் என்று இலங்கை மத்;திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
ஆனால் அது எப்போது நடக்கும் அல்லது இந்த ஆண்டு இறுதிக்குள் நடக்குமா என்பது குறித்து காலவரையறை கொடுக்கவில்லை என்றும் அவர் கூறியதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இலங்கை அதிகாரிகள், இந்த வாரம் வோசிங்டனில் பத்திரப் பதிவுதாரர்களை சந்தித்து, பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
வோசிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக் கூட்டங்களுக்கு அப்பால்; நடைபெற்ற இந்த பேச்சுக்கள் இலங்கையை நெருக்கடி நிலையில் இருந்து விரைவாக வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டமைந்தது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக 2022 இல் இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை
அத்துடன் மேலும் 12.5 பில்லியன் டொலர் சர்வதேச பத்திரங்களை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன் ஒரு வரைவு ஒப்பந்தத்தை கடந்த செப்டெம்பரில் எட்டியது.
இதனை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர் தரப்புக்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan