சிலையில் தொங்கிய நிலையில் துண்டிக்கப்பட்ட தலை! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Shadhu Shanker May 14, 2026 01:32 AM GMT
Report

அம்பலாந்தோட்டை மாமடல பகுதியில் இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

நபர் ஒருவரை சுட்டுக் கொன்று, பின்னர் அவரது தலையை துண்டித்து தேவியின் சிலையில் வைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக 24 எம்.எல்.ஏ.க்கள்! கட்சியின் அதிரடி முடிவு

தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக 24 எம்.எல்.ஏ.க்கள்! கட்சியின் அதிரடி முடிவு

கொடூரக் கொலை

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் சகோதரர் முன்னர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிலையில் தொங்கிய நிலையில் துண்டிக்கப்பட்ட தலை! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள் | The Head On The Statue Background To The Murder

உயிரிழந்தவர் 34 வயதுடைய ‘பொடி’ என அழைக்கப்படும் லக்மால் சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 11ஆம் திகதி இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், அன்றைய தினமே அவரது பிறந்தநாளாகவும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உயிரிழந்தவர் கடந்த பெப்ரவரி மாதம் மாமடல பகுதியில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபராக இருந்ததுடன், மார்ச் 30ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மகிந்தவை தேடி ஓடிச் சென்ற கோட்டாபய! சுற்றிவளைக்கப்படும் விசாரணை

மகிந்தவை தேடி ஓடிச் சென்ற கோட்டாபய! சுற்றிவளைக்கப்படும் விசாரணை

கொலையின் பின்னணி

‘மெத்த லொக்கு’ என அழைக்கப்படும் சலித உதயங்க மல்லிகாராச்சி, சமீர உதயங்க மற்றும் சாரங்க தர்ஷன ஆகியோர் இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சிலையில் தொங்கிய நிலையில் துண்டிக்கப்பட்ட தலை! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள் | The Head On The Statue Background To The Murder

இவர்களை உயிரிழந்தவரின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். சமீர உதயங்க சம்பவம் நடைபெற்ற தினமே கைது செய்யப்பட்ட நிலையில், மற்றைய இருவரும் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக உயிரிழந்தவரின் குழுவினரால் கொல்லப்பட்ட ‘மெத்த பொடி’ என்பவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ‘மெத்த லொக்கு’வின் மூத்த சகோதரர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பழிவாங்கும் உணர்வே இந்தக் கொலையின் பின்னணியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஷானி அபேசேகரவை காப்பாற்றிய தமிழ் பெண்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஷானி அபேசேகரவை காப்பாற்றிய தமிழ் பெண்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

பொலிஸ் விசாரணை

சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்கியதாக ஏற்பட்ட சந்தேகமே இந்த மோதல்களின் அடிப்படை காரணமாக இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் தலையை துண்டித்து சிலையில் வைக்கும் திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதற்குப் பின்னணியில் ‘கருணா லொக்கா’ என அழைக்கப்படும் ரஞ்சித் பிரியந்த எதிரிவீர இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிலையில் தொங்கிய நிலையில் துண்டிக்கப்பட்ட தலை! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள் | The Head On The Statue Background To The Murder

பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கருணா லொக்கா, சம்பவம் நடந்த தினமே தமக்கு எதிரான பிடியாணை காரணமாக நீதிமன்றத்தில் சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது இந்தக் கொலை வழக்கிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் பொலிஸார் கருதுகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

You May Like This..


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US