அரசாங்கம் விரைவில் பாரதூரமான அனர்தத்தை எதிர்நோக்கும்:ஜனாதிபதியை எச்சரிக்கும் ஓமல்பே சோபித தேரர்
போராட்டத்தின் மூலம் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எச்சரிக்கையான எதிர்வுகூறல் ஒன்றை விடுப்பதாக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி உட்பட ஆட்சியாளர்கள் கண்ணீர் சிந்தும் கண்களுடன் அனர்தத்தை சந்திக்க நேரிடும்

மாநாயக்க தேரர்கள் மற்றும் சமய தலைவர்கள் ஆலோசனைகளுக்கு செவிக்கொடுக்காது தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டமானது விரைவில் பாரதூரமான அனர்தத்தை எதிர்நோக்கும்.
கண்ணீர் சிந்தும் கண்களுடன் ஜனாதிபதி உட்பட ஆட்சியாளர்கள் அதனை எதிர்நோக்க நேரிடும். 40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதற்கு முன்னர் மக்கள் போராட்டத்திற்காக வீதிக்கு வந்தனர். அடுத்த போராட்டத்தில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இணைந்துக்கொள்வார்கள்.
சுதந்திரமாக செயற்பட எவராவது இடமளிக்கவில்லை என்றால் அதனை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்ல எவராவது இடமளிக்கவில்லை என்றால், அது சம்பந்தமாக நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தி உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri