வட்டவளை மவுன்ஜின் தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
அம்பகமுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரிவின் கீழ் வரும் ஹட்டன், வட்டவளை - மவுன்ஜின் தோட்டம் இன்று முதல் மறு அறிவித்தல் விடுக்கும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி கிறிஷான் பேமசிறி தெரிவித்துள்ளார்.
ஹட்டன் - வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களின் இணைப்பாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்தே மவுன்ஜின் தோட்டத்தை தனிமைப்படுத்த தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள மவுன்ஜின் தோட்டத்தை சேர்ந்த பல குடும்பங்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட உள்ளது. வட்டவளை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் இணைப்பாளர்கள் என 59 பேர் கொரோனா தொற்றாளர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.