ஆளும் கட்சியின் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத சுதந்திரக் கட்சி
ஆளும் கட்சியின் தலைவர்களின் கூட்டம் இந்த வாரம் நடைபெறவிருந்ததுடன் அதில் தமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களால் கலந்துக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்ததை அடுத்து, கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அனுராதபுரத்தில் நடைபெறும் விசேட சமய நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள உள்ளதால், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாது ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது அரசாங்கம் தொடர்பாக முன்வைத்து வரும் விமர்சனங்கள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்பட இருந்ததாக கூறப்படுகிறது.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri