முதல் தடவையாக யாழ்ப்பாணம் வந்த ஆதிவாசிகள் (Photos)
மகியங்கனையில் வசித்து வரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவரின் தலைமையிலான 70 ஆதிவாசிகள் குழுவினரே முதல் தடவையாக இன்று (21.10.2023) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
விருந்தோம்பல் நிகழ்வு
இவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வு நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து பிரசித்தி பெற்ற இடங்களான யாழ்ப்பாணம் மத்திய நாகவிகாரைக்கும், நயினாதீவு நாகதீபம் விகாரைக்கும், சென்று வழிபாடுகள் செய்துவிட்டு வரலாற்று சின்னங்களையும் சுற்றி பார்வையிட்ட பின்னர் மீண்டும் தமது இருப்பிடமான மகியங்கனைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனவிரட்ன, பொலிஸார், ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.














ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam

டெஸ்ட் வரலாற்றில் 1 ரன்னில் த்ரில் வெற்றிகள்: மிகச்சிறிய வித்தியாசத்தில் முடிந்த டாப் 10 போட்டிகள் News Lankasri
