காணாமல் போன மகனைத்தேடி போராடிய தந்தை மரணம்!
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
வவுனியா தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த சந்தணம் ராகவன் (வயது 65) என்ற தந்தையே உயிரிழந்துள்ளார்.
இவரது மகன் ராஜ்குமார் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் .
அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனைக் கண்டுபிடிப்பதற்காகத் தொடர்ச்சியாகப் போராடியிருந்தார்.
இந்நிலையில் மகனைக் காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.