கோவிட் தொற்றுக்குள்ளான இளைஞன் தப்பியோட்டம்
கம்பஹா அத்தனகல்லை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திஹாரிய மல்வத்தை சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய கோவிட் தொற்றுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாதலான பிரதேசத்தில் உள்ள விடுதியில் தற்காலிகமாக தங்கி இருந்த நிலையில், அந்த இளைஞர் தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்றுள்ள இந்த ஊழியர் மாவத்தகமை கஹபத்வல மல்தெனிய பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாக கொண்டவர்.
இவருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்ட பின்னர், சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வரை விடுதியில் தங்கி இருக்குமாறு சுகாதார பரிசோதகர்கள் ஆலோசனை வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில் அந்த இளைஞர் விடுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக சுகாதார துறையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த இளைஞர் தங்கி இருந்த விடுதியில் மற்றுமொரு நபருக்கும் கோவிட் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri