ஐக்கிய தேசிய கட்சியின் இணைவுக்காக திறக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள்
ஐக்கிய தேசியக் கட்சி, தமது அசுத்தங்களை நீக்கி சுத்தமாகிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாக இருந்தால் அதற்காக கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றன.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சி அதே பாதையில் பயணிக்கும் என்றிருந்தால் அதற்காக கவலைப்படுவதை தவிர, வேறு மாற்றீடு ஒன்றும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுமாறு அந்த கட்சியின் செயலாளரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ரஞ்சித் மத்தும பண்டார தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களின் இணக்கத்துடனேயே ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கபட்டது என்பது அதன் உறுப்பினர்களுக்கு தற்போது மறந்து போயுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கடந்த தேர்தல் நிரூபித்துக்காட்டியுள்ளது. அது எழுமாறாக நடந்த விடயம் அல்ல. இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைந்து செல்வதற்கு காரணம் என்பது குறித்த, அந்த கட்சி சுயவிசாரணை செய்து கொள்வது அந்தக் கட்சிக்கு உள்ள ஒரே தீர்வாகும் என்று மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் நல்லாட்சி அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணமான மத்திய வங்கியின் முறி மோசடிக்காரர்களை பாதுகாப்பது மற்றும் அரசாங்கத்துடன் இணக்கங்களை மேற்கொண்டு தந்திரமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் ஆதரிப்பார்களா என்பதை ஐக்கிய தேசிய கட்சி பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.
இதேவேளை, ஆரம்பகால ஐக்கிய தேசியக் கட்சியின் பெறுமதிமிக்க மற்றும் முன்னுதாரண செயற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தி தற்போது முன்னெடுத்து வருகின்றது.
அத்துடன் சகல இனங்களையும் உள்ளடக்கி ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர்
ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
