இலங்கை சுகாதார துறையை ஆட்டங்காண செய்த டெல்டா வைரஸ்! உண்மையை வெளிப்படுத்திய வைத்தியர்
இந்தியாவின் டெல்டா வைரஸ் பரவ ஆரம்பித்தால் அச்சுறுத்தல் அதிகமாகும். சுகாதார தரப்பினரால் தாங்கிக் கொள்ள முடியாத நெருக்கடி நிலைமை உருவாகும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம் என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த தகவல்களில்,
பயணக்கட்டுப்பாட்டை மாத்திரம் பிறப்பித்து கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னரும் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்.
இல்லையேல் நிலைமைகள் மேலும் மோசமடையும். இந்தியாவில் பரவியுள்ள டெல்டா வைரஸ் தொற்று இலங்கையிலும் பரவுகின்றது என்பது இப்போதே தெரியவந்துள்ளது.
ஆனால் டெல்டா வைரஸ் பரவல் ஏற்படும் என்பது எமக்கு ஏற்கனவே தெரியும். ஆகவேதான் அதிக கவனமாக செயற்பட்டோம். எனினும் உடனடியாக எம்மால் முழுமையான நிலைமைகளை கூற முடியாது. டெல்டா வைரஸ் தொற்றாளர்
அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புதிய தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை. அது மட்டுமல்ல வேறு பகுதிகளுக்கு டெல்டா வைரஸ் பரவியுள்ளதாக கண்டறியப்படவில்லை.
சகல விதத்திலும் சுகாதாரத் துறைியினரால் மாத்திரம் நிலைமைகளை கையாள முடியாது. எனவே மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தமது பாதுகாப்பை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால் விளைவுகள் மோசமாகும்.
இந்தியாவின் நிலைமைகளை கருத்திற்கொண்டு எப்போதுமே நாம் செயற்பட்டாக வேண்டும். சுகாதார நிபுணர்களுடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதும் டெல்டா வைரஸ் பரவல் குறித்து முக்கிய கவனம் செலுத்துமாறு சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தினர்.
எனவே சுகாதார அமைச்சகம் இந்த நடவடிக்கைகள் குறித்து கூடிய கவனம் செலுத்துகின்றது.
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் கூட சுகாதார கட்டுப்படுகள் பிறப்பிக்கப்படும். மக்கள் அவற்றை நிராகரிக்க முடியாது.
சுகாதார வழிமுறைகளை முழுமையக பின்பற்றினால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நட்டத்தால் ஒருபோதும் கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது.
வெறுமனே பயணக்கட்டுப்பாட்டை மாத்திரம் பிறப்பித்தும் வைரஸ் பரவலை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.