நீர் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
மின்சார கட்டணங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நீர் கட்டணங்களை திருத்த நீர் வழங்கல் சபை தயாராகி வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கட்டண திருத்தத்தின் சதவீதம் தொடர்பான, சபையின் சிறப்புக் குழுவின் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
நீர் கட்டணம்
நிலுவையில் உள்ள நீர் கட்டணங்களைச் செலுத்தாததால், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கடன் 16 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடனை நிர்வகிக்க, தங்கள் கட்டணங்களைச் செலுத்தத் தவறும் நுகர்வோரின் நீர் வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில், நாடு முழுவதும் நீர் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெறப்பட்ட கடன்களுக்கு இந்த சபை கணிசமான வட்டியைச் செலுத்த வேண்டியுள்ளதாக நீர் வழங்கல் சபையின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri