இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாயம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!(Video)

By Renuka Aug 02, 2023 09:10 AM GMT
Report

இலங்கையில் நாளுக்கு நாள் பல்வேறுபட்ட நோய்கள் அதிகரித்து வருவதாகவும் இதனால் மரண சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது என்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தொற்று பரவல் காணாமல்போன நிலையில், கொசுக்களால் ஏற்படும் டெங்கு, ஒட்டுண்ணியால் ஏற்படும் மலேரியா மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் தட்டம்மை நோய், நரம்பியல் நோய், இதய சம்பந்தமான நோய்கள், எலிக்காய்ச்சல், மன அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களால் பாதிப்படைந்து வருகின்றனர். 

இந்த வருடத்தில் இதுவரை நாட்டின் பல பகுதிகளில் இருந்து 20 மலேரியா வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வருடம் 41,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளதுடன், 25 டெங்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டிகே தெரிவித்துள்ளார்.


மேலும், மேல் மாகாணத்தில் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை வாரந்தோறும் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பில் ஆய்வு ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், மனிதர்களாகிய எம்மை தாக்கும் 375 நோய்களில் 218-க்கும் அதிகமான நோய்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் என சுற்றுச்சூழல், சுகாதார விஞ்ஞானிகள் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை உயர்வு காரணமாகவே பல்வேறுபட்ட நோய்கள் தாக்குவதுடன், வெப்பநிலை உயர்வு, மலேரியாவை ஏற்படுத்தும் கொசுக்களின் ஆயுளை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாயம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!(Video) | The Danger In Sri Lanka

எதிர்பாராத பல ஆபத்துகள் 

மேலும், மழை, வெள்ளப்பெருக்கு என்பவற்றால் கல்லீரல் அழற்சி (ஹெபிடைடிஸ்) நோயினை உண்டாக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

காலநிலை மாற்றம் எதிர்பாராத பல ஆபத்துகளை உருவாக்கும். இதனால் சூழலுக்கு ஏற்றவாறு எளிதில் நம்மை மாற்றியமைப்பது இயலாத செயலாகும். 

நாட்டின் சுகாதார நெருக்கடிகளைத் தடுப்பதற்கு, காலநிலை ஆபத்துகளுடன் தொடர்புடைய மனித நோய்கள் குறித்து விரிவான புரிதல் அவசியம். 

இந்த காலநிலை மாற்றமானது, நோய்க்கிருமிகளின் தாக்கத்தினை அதிகரிப்பதுடன் நோய்க்கிருமிகளைச் சமாளிக்கும் உடலின் திறனையும் பலவீனப்படுத்துகிறது. 

கொசுக்கள், வௌவால்கள், எலிகள் போன்றவற்றால் பரவும் நோய்களின் எண்ணிக்கையினை காலநிலை மாற்றம் அதிகரிக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாயம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!(Video) | The Danger In Sri Lanka

வெப்பம் அல்லது மழைப்பொழிவு

வளிமண்டல வெப்ப மயமாதல் காரணமாக 160 நோய்களும் அதிக மழை பொழிவு காரணமாக 122 நோய்களும் வெள்ளம் காரணமாக 121 நோய்களும் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இவ்வாறு காலநிலை ஏற்படுத்தும் வெப்ப மயமாதல் அல்லது மழைப்பொழிவு மாற்றங்கள் கொசு உற்பத்தியினை அதிகரிக்கச் செய்கின்றது. 

கடந்த பத்தாண்டுகளில் கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படுத்திய புவியியல் தாக்கங்கள் காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்தவை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

வெப்ப காலத்தில் பெரும்பாலான மக்கள் தண்ணீரில் அதிக நேரம் செலவிடுவர். இது நீரினால் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றன.

நாம் வாழும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் நோய்க்கிருமி மற்றும் நோய் கடத்திகளுக்கான தொடர்பினையும் கடுமையான நோய்களை ஏற்படுத்துவதுடன், நோய்க்கிருமிகளின் திறனையும் காலநிலை மாற்றம் அதிகரிக்கச் செய்யும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாயம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!(Video) | The Danger In Sri Lanka

தொற்றுநோய் கிருமிகளை

அதிக மழை அல்லது வெள்ளம் காரணமாகத் தேங்கி நிற்கும் நீா் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.

இது மஞ்சள் காய்ச்சல், டெங்கு, மலேரியா, ஓரணு ஒட்டுண்ணி நோய் (லீஷ்மேனியாசிஸ்) போன்ற நோய்களின் பரவலுக்கு வழிவகுக்கும்.

சுற்றுச்சூழல் வெப்பநிலை அதிகரிப்பு, தொற்றுநோய்க் கிருமிகளை வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டதாக மாற்றக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

அதிகரித்து வரும் நாடளாவிய வெப்பநிலை, நோய்க்கிருமி அல்லாத பூஞ்சையினை பூசணத் தீங்குயிரியாகமாற்றியுள்ளது. 

இதேபோல், கொழும்பு போன்ற நகர்ப்புற சூழலில் உருவாகும் பூஞ்சைகள் குளிர்ச்சியாக இருக்கும் கிராமப்புறங்களில் உள்ளதை விட அதிக வெப்பம் தாங்கும் திறன் கொண்டவை என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு காலநிலை மாற்றம் தொடர்பான ஆபத்துகள், மனித சரீரத்தின் திறனை இரு முக்கிய வழிகளில் பாதிக்கலாம். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாயம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!(Video) | The Danger In Sri Lanka

காலநிலை மாற்றம் 

முதலாவதாக, பேரழிவும் அதனால் ஏற்படும் சேதமும் மக்களை ஒரே இடத்தில் மிகவும் நெரிசலான சூழ்நிலையில் வாழ வழி செய்யும். அத்துடன், சுகாதாரம் இல்லாத இந்த அபாயகரமான சூழலில் அவர்கள் எளிதில் நோய்க்கிருமி தாக்குதலுக்கு உள்ளாகலாம். 

இரண்டாவதாக, நாட்டில் ஏற்பட்டுள்ள ஊட்டச் சத்துக் குறைபாடு ஆகும். இதனால் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறனைக் குறைக்கலாம்.

காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் அதீத மன அழுத்தம் அண்ணீரகச் சுரப்பி (Adrenal gland) உற்பத்தியை அதிகரிக்கச் செய்து மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாயம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!(Video) | The Danger In Sri Lanka

பெரும் தாக்கம் 

இவ்வாறு அழிவினால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளைத் தவிர்க்கவும் காலநிலை மாற்றம் தொடர்பான இறப்புகளைத் தடுக்கவும் உலகம் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று காலநிலை மாற்றத்திற்கான குழு முடிவு செய்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சமூக, சுகாதார, பொருளாதார நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கப் புவி வெப்பமடைதலுக்குக் காரணமான பைங்குடில் வாயு (Greenhouse gas) உமிழ்வினை மனிதக்குலம் தவிர்க்க வேண்டியது இன்றியமையாதது.

இந்த காலநிலை மாற்றமானது இலங்கை மட்டுமன்றி உலகம் முழுவதும் பல்வேறு தொற்றுநோய்களின் தாக்கம் 58 சத வீதம் அதிகரிக்கக்கூடும் எனவும் ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. 

இவ்வாறான காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் ஏற்படும் வறட்சி மற்றும் மழைவீழ்ச்சி முறைகளில் ஏற்படும் மாற்றமானது மக்களது உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மக்களுக்கு நோய் ஆபத்து ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US