மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை!
அரசாங்கம் தற்போது செயற்படுவது போல் தொடர்ந்தும் செயற்பட்டு வந்தால், இந்த ஆண்டு மேலும் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும் என லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதான செயலாளர் திஸ்ஸ விதாரண(Tissa Vitharana) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நடக்கும் காலம் முழு உலகத்திற்கும் பொருளாதார ரீதியாக மிகவும் கடினமாக காலம். இப்படியான நிலைமையில் இலங்கை போன்ற சிறிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் தற்போது மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இந்த நிலைமையை சீர்ப்படுத்த எமது கட்சி உட்பட 10 கட்சிகள் முன்வைத்த யோசனைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
