அநுர அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு தற்போதைய அரசாங்கம் நியமித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் விமுக்தி டி சொய்ஸா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குற்றச்சாட்டு
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,''தற்போதைய அரசாங்கம், தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்கும் செயற்பாடுகளை ஆயுர்வேத திணைக்களத்திலிருந்து ஆரம்பித்துள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறான நியமனங்கள் ஊடாக அரச ஆயுர்வேத சேவை உள்ளடக்கிய அரச சேவையைக் கேள்விக்குறியாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் எதிர்பாராத விதமாக வீழ்ச்சியடைந்த பணவீக்கம் - வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு News Lankasri
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam