அரிசி தட்டுபாடு! அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஒரு கிலோ அரிசிக்கான இறக்குமதி வரியை 65 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக குறைக்குமாறு அரிசி இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அண்மையில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
அரிசி இறக்குமதி
நாடு அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளனர்.
அதன்போது ஒரு கிலோ அரிசிக்கான இறக்குமதி வரியை 65 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக குறைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விலை மனு
அரிசி இறக்குமதிக்கு சந்தர்ப்பம் வழங்கினால் 15 நாட்களுக்குள் சந்தையில் நாட்டு அரிசிக்கான தட்டுப்பாட்டைக் குறைக்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தநிலையில், அரிசி இறக்குமதிக்கான விலை மனு கோரப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளிடம் கொள்வனவு செய்வதற்கு போதியளவு நெல் கையிருப்பில் இல்லை எனவும் இறக்குமதியாளர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.





துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
