கூடுதல் ஊக்கத் திட்டம் ரத்து! - மத்திய வங்கி அறிவிப்பு
புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் மற்றும் ஏற்றுமதி செய்பவர்களுக்கான உத்தேச கூடுதல் ஊக்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
செலாவணி விகிதத்தில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிப்பதற்கான அதன் முடிவின் விளைவாக, இலங்கைக்கு பணம் அனுப்புதல் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை ஊக்குவிப்பதற்காக வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகளின் அளவை விட நாணயமாற்று வீதம் தற்போது அதிகமாகியுள்ளது என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, தற்போதைய மாற்று விகிதமானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் அனுப்புவதில் அதிக வருமானத்தையும் ஏற்றுமதியாளர்களின் அதிக நிகர வருமானத்தையும் கொண்டு வரும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் மற்றும் ஏற்றுமதியாளர்களின் நிகர வருமானத்திற்கான உத்தேச கூடுதல் ஊக்குவிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மார்ச் 2022 இல் மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளின்படி, செலாவணி விகிதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காரணமாக, வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் முறையான வழியில் அந்நிய செலாவணி வருமானத்தை இலங்கை ரூபாயாக மாற்றுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 14 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
