இந்தியர்களின் 200ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு: கண்டனம் தெரிவித்துள்ள சட்டத்தரணி
யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு மற்றும் யாழ். இந்திய துணைத்தூதரகம் இணைந்து நடத்தும் ''இந்தியர்களின் 200ஆவது வருட நினைவேந்தல்'' எனும் நிகழ்விற்கு சட்டத்தரணி தம்பையா ஜெயரட்னராஜா கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவையிடம் நேற்று (18.03.2023) அவர் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு மற்றும் யாழ். இந்திய துணைத்தூதரக அனுசரணையுடன் இலங்கைவாழ் இந்தியர்களின் 200ஆவது வருட நினைவேந்தல் உற்சவம் என தலைப்பிடப்பட்ட நிகழ்வொன்றில் அழைப்பிதலை சமூக ஊடகங்களில் காண முடிந்தது.
இந்நிலையில் மலையக மக்களை சிறுமைப்படுத்தும் வகையில் இலங்கைவாழ் இந்தியர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
மலையக மக்களாகிய நாம் பல உயிர் தியாகங்கள் செய்து இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆணி வேராக இருக்கின்றோம்.
நாம் இந்தியர்கள் அல்ல, இது எமது நாடு, நாம் இந்த நாட்டின் குடியுரிமையை பெற்றவர்கள், எமது தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காக நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
நினைவேந்தல் எனும் சொல்லுக்கு பொருள் தெரியாத நபர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்விற்கு பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தலைமை தாங்குவது எமக்கு கவலையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான விபரங்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 22 மணி நேரம் முன்

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
