அமைச்சரின் மனைவிக்கு நீதிமன்றம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
அமைச்சரின் மனைவி ஒருவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு ஒன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் விடுத்த அறிவிப்பை அமைச்சரின் மனைவியான ஐரங்கனி டி சில்வா மீறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்னை நாளையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தம்புத்தேகம நீதிவான் புத்திக மல்வத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக நடவடிக்கை
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், சந்தேகத்துக்குரிய அமைச்சரின் மனைவி அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகாவிட்டால், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கருதி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிவான் எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |