ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட தாய்லாந்து கப்பல் : வன்மையாகக் கண்டிக்கும் இந்தியா
ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட தாய்லாந்து கப்பல் மேற்கு இந்தியாவில் உள்ள கண்ட்லா துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலில், வணிகக் கப்பல் போக்குவரத்து இராணுவத் தாக்குதல்களுக்கு இலக்காக மாற்றப்படுவதை இந்தியா கண்டிக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மோதலின் ஆரம்ப கட்டத்தில்
இந்த மோதலின் ஆரம்ப கட்டத்தில் இதுபோன்ற பல தாக்குதல்களில் இந்திய குடிமக்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளன.
Statement regarding ship bound for Kandla, India ⬇️
— Randhir Jaiswal (@MEAIndia) March 11, 2026
🔗 https://t.co/CdtmMXAdPY pic.twitter.com/xVK9AymYn2
மேலும் தாக்குதல்களின் தீவிரமும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது என்றும் அதில் குறிப்பிடப்ட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam