கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு முன்பாக பதற்ற நிலை! களத்தில் அதிரடிப்படையினர்
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்னால் இன்று மாலை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட 33 பேர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 25000 ரூபா ரொக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதன் பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு அவர்கள் மறுப்பு வெளியிட்டமையை அடுத்தே அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து கலகம் தடுக்கும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிந்திய தகவலின்படி இலங்கை ஆசிரியர் சேவை சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 15 பேர் விசேட தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam
