விடுதி அறையில் மாணவர்களுடன் தங்கியிருந்த ஆசிரியர் கைது
அனுராதபுரம், எப்பாவல நகரிலுள்ள விடுதி ஒன்றில் 13 வயதுடைய இரு சிறுவர்களுடன் தங்கியிருந்த 51 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக எப்பாவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 27ஆம் திகதி அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற வலைப்பந்தாட்டப் பயிற்சிக்காக தனது பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயது சிறுவர்களை அழைத்துச் செல்வதாக இந்தப் பாடசாலை ஆசிரியர் பெற்றோரிடம் கூறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர் கைது
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் இரண்டு பிள்ளைகளையும் வீட்டுக்கு அனுப்பாமல் எப்பாவலயிலுள்ள தங்குமிடமொன்றில் தங்கியிருந்துள்ளார்.

இதன்போது இனந்தெரியாத ஒருவரால் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேகநபர் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
You may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri