ஆசிரியர் பற்றாக்குறை: பாதிப்புக்கு உள்ளாகும் திருகோணமலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை
திருகோணமலை - ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர்தரக் கற்கை நெறிகளுக்கான ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்களது எதிர்காலம் நிச்சையமற்றதாக காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக நேற்றையதினம்(03.01.2024) திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமூக ஆர்வலர்கள் முறையாடொன்றையும் பதிவு செய்துள்ளனர்.
பல வருட காலமாக குறித்த பாடசாலையில் நிலவிவரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்து தருமாறு கோரிக்கை விடுத்த போதிலும் இது தொடர்பாக அரச மட்டத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததன் காரணமாக குறித்த விடயம் தொடர்பில் முறையிட தாம் வருகை தந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் பற்றாக்குறை
பாடசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு உயர்தர கலை பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாமையினால் 50% மாணவர்களே சித்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து கடந்த காலங்களில் பாடசாலையில் உயர்தரம் நடத்தப்படவில்லை எனவும், இதற்கு ஆசிரியர் பற்றாக்குறையும் வளப்பற்றாக்குறையுமே காரணம் எனவும் கூறப்படுகிறது.
எனினும், 2022ம் ஆண்டு வெளியான சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும் போதிய ஆசிரியர்கள் இன்மையால் அவர்களால் குறித்த பாடசாலையில் உயர்தரத்தினை தொடர முடியாதுள்ளது.
முன்வைக்கப்பட்டள்ள கோரிக்கை
இதனால் மாணவர்கள் வெளிப்பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இம்முறையும் 2023ம் ஆண்டு வெளியான சாதாரணதரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் இக்கிராமத்தைச்சேர்ந்த மாணவர்கள் சித்தியடைந்து உயர்தம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் குறித்த பாடசாலையில் உயர்தரம் கற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பெற்றோரின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் குறித்த பாடசாலைக்கு ஆசிரியர்களை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
