8000 பேருக்கு அடுத்த வாரம் ஆசிரியர் நியமனம்! வெளியான அறிவிப்பு
ஆசிரியர் நியமனம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
கல்வியியற் கலாசாலைகளில் இருந்து டிப்ளோமாதாரிகளாக வெளியேறிய சுமார் 8000 பேருக்கு அடுத்தவாரம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நியமனம் வழங்கும் நிகழ்வு
இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி அவர்களுக்கான நியமனம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேல் மாகாணம் மற்றும் தேசிய பாடசாலைகளுக்காக தெரிவாகியுள்ள 2500 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.
ஏனைய மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர்களது நியமனங்கள், அந்தந்த மாகாணங்களில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |