கொழும்பில் வரி கட்டணம் செலுத்துபவர்களுக்கு ஓர் அறிவிப்பு
கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேச வாழ், வரி கட்டணம் செலுத்தும் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இணையவழி ஊடாக வரி கட்டணம் செலுத்தும் போது கொழும்பு மாநகரசபையினால் அறவிடப்பட்டு வந்த சேவை கட்டணம் நீக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷினி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான அவரது அறிவிப்பில் மேலும்,
கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்கள் வரி கட்டணத்தை மாநகரசபையின் www.colombo.mc.gov.lk என்ற இணையத்தளத்துக்கு சென்று செலுத்துவதற்கு மாநகரசபை இடமளித்திருந்தது.
அதன் பிரகாரம் அதிகளவான மக்கள் இணைவழி ஊடாக தங்கள் வரி கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.
இணையவழி ஊடாக வரி கட்டணம் செலுத்தும்போது இதுவரை அதற்காக சேவை கட்டணமொன்று கொழும்பு மாநகரசபையால் அறவிடப்பட்டு வந்தது.
எனினும் தற்போது சேவைக்கட்டணத்தை அறவிடாமல் இருப்பதற்கு மாநகரசபை தீர்மானித்திருக்கின்றது.
மேலும், இதற்கு முன்னர் அறவிடப்பட்ட சேவை கட்டணமானது கொழும்பு மாநகரசபையினால் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam