தமிழர் தேசத்துக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் - வடக்கு கிழக்கு தமிழ் மாணவர் ஒன்றியம் கோரிக்கை (Video)
வடக்கு, கிழக்கு என்ற பிரிவினை இன்றி தமிழர் தேசத்துக்காக, தமிழர்களுடைய பிரச்சனைகளுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு கிழக்கு தமிழ் மாணவ ஒன்றிய தலைவரும், கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார மாணவர் ஒன்றியத்தின் தலைவருமான தர்சன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (02.11.2022) நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வலி. வடக்கில் 2467 ஏக்கர் பரப்பளவினை இராணுவம் கைப்பற்றியுள்ளது.
இராணுவத்தினர் வசப்படுத்துவதற்கான நடவடிக்கை
இதனை மக்கள் விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்கின்ற போதிலும் தற்போது அந்த இடத்தினை இராணுவத்தினர் வசப்படுத்துவதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. மாணவர் சக்தியாக நாங்கள் இணைந்து இதற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
வடக்கில் இருந்து கிழக்கும், கிழக்கில் இருந்து வடக்குக்குமாக இன்றும் இந்த பயணம் தொடர்கிறது. இன்று முதல் வடக்கு, கிழக்கு என்று எந்த பிரிவினையும் இன்றி தமிழர் தேசத்துக்காக தமிழர்களுடைய பிரச்சனைகளுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதை கூறிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் நேற்று(02.11.2022) யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு ஒன்றியங்களுக்குமிடையிலான எதிர்கால திட்டமிடல்கள், தமிழ்
தேசிய பரப்பினுள் மாணவர் ஒன்றியங்களாக ஆற்ற வேண்டிய செயற்திட்டங்கள் போன்ற
ஆக்கபூர்வமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
