தாயக மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக புதிய திட்டம்: பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவிப்பு

Sri Lankan Tamils Eastern Province Northern Province of Sri Lanka
By Kumar Jul 09, 2023 09:58 PM GMT
Report

வடகிழக்கில் உள்ள மூன்று இனங்களினதும் தனித்துவத்தினையும் அவர்களின் தேசியத்தினையும் உறுதிப்படுத்தும் வகையிலான அரசியல் தீர்வுத்திட்ட வரைபினை முன்கொண்டு செல்லவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக அரசியல்துறை தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்றும் (கிளிநொச்சி) இன்றும்(மட்டக்களப்பு) இடம்பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடல் நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த வரைவை தயார் செய்து வரைபினுடைய உள்ளடக்கங்கள் அனைத்தையும் சிவில் அமைப்புகளோடு உரையாடி, அதில் என்னென்ன விடயங்களை மேலும் இணைத்துக் கொள்ளுதல், அதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றியும் சிவில் அமைப்புகளுடைய காத்திரமான பங்கு இந்த வரைபுக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடும் வடக்கு கிழக்கை சேர்ந்த சிவில் அமைப்புகளை கடந்த இரண்டு நாட்களில் சந்தித்திருக்கிறோம், கலந்துரையாடி இருக்கிறோம்.

அரசியல் சார்ந்த பிரச்சினை

தாயக மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக புதிய திட்டம்: பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவிப்பு | Tamils Political Problems New Solution

அது தொடர்பான சில விமர்சனங்கள் அல்லது வாதங்கள் அல்லது அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான உள்ளடக்கங்களை அந்த வரைவுக்குள் முதன்மைப்படுத்துகின்ற விதத்தில் சிவில் அமைப்புகள் முக்கியமான அம்சங்களை முன் வைத்திருக்கின்றார்கள்.

குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சிவில் அமைப்புகள் அதிகமான விடயங்களை தெரிவித்தது மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் இது தொடர்பான உள்ளடக்கங்களை மேலும் வலிமைப்படுத்துவதற்கும், ஆரோக்கியமான உரையாடலை செய்வதற்குமான விடயங்களை அவர்கள் எங்கள் முன்னிலையில் வழிமொழிந்திருக்கிறார்கள்.

நிச்சயமாக இந்த வரைவு ஈழத்தமிழர்களுடைய அரசியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அரசியல் கட்சிகள் அதேபோன்று சிவில் அமைப்புகள், புலம்பெயர் தளத்தில் இருக்கின்ற அமைப்புகள் அனைவருக்கும் இடையில் ஒரு பொதுவான, அங்கீகரிக்கப்பட்ட ஒரே தீர்வாக இந்த விடயத்தை முதன்மைப்படுத்துவதற்கு நோக்கம் கொண்டு தான் மக்கள் சிந்தனை மையம் அதை ஏற்படுத்தி இருக்கிறது.

2021 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் சிந்தனை மையம் அரசியல் கட்சிகளோடு உரையாடி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு உரையாடி இந்த வகையான ஒரு வரைபை வரைந்து அந்த வரைபை மக்களிடம் அல்லது சிவில் அமைப்புகளிடம் அதற்குரிய தெளிவையும் அதற்குரிய உண்மை தன்மையும் வலியுறுத்திவிட்டு மீண்டும் அரசியல் கட்சிகளோடு இந்த விடயம் தொடர்பாக உரையாடி, அதேபோல் புலம்பெயர் தளத்தில் இருக்கின்றவர்களுடன் இந்த விடயம் தொடர்பாக உரையாடி ஒரு இறுதி முடிவை எடுத்த பிற்பாடு ஊடகங்கள் சார்ந்து இறுதி முடிவினுடைய வடிவத்தை நாங்கள் ஒப்புவிப்பது என்று தீர்மானித்திருக்கிறோம்.

அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வு

தாயக மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக புதிய திட்டம்: பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவிப்பு | Tamils Political Problems New Solution

அதற்கான பூர்வாங்க வேலைகளை இந்த சிவில் அமைப்பின் உடைய உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள், சார்ந்திருக்க கூடியவர்கள் மேற்கொள்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

வரக்கூடிய இந்த வரைபினுடைய உள்ளடக்கம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருக்கக்கூடிய அல்லது இலங்கையினுடைய அரசியல் பரப்பில் பொருத்தப்பாடு உடையது என்று கருதப்படக் கூடிய விடயங்களை உள்ளடக்கி தான் இந்த சிவில் தரப்புகளுடன் சேர்ந்து மக்கள் சிந்தனை மையம் இந்த வரைபை முதன்மைப்படுத்தி இருக்கிறது.

ஒரு கூட்டு ஆட்சி தன்மை குறித்த வரைபாகவே இதனுடைய உள்ளடக்கம் காணப்படுகிறது. அதேநேரம் இது கூட்டு சமஷ்டியையும் சமஷ்டிக்குரிய மாதிரிகளையும் இந்த வரைபில் பேசப்படுகிறது.

13 சார்ந்து பேசப்படுகிறது. இவை எல்லாவற்றையும் முதன்மைப்படுத்துகின்ற வகையில் ஈழத் தமிழர்கள் ஒரே வரைபாக இந்த விடயத்தை முதன்மைப்படுத்துகின்ற நோக்கோடு இந்த வரைபினுடைய உள்ளடக்கம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இதன் ஊடாக ஈழத் தமிழர்களுக்கான அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை இந்த வரைவு தனக்குள்ளே உள்ளடக்க வேண்டும் என்பதும், அந்த உள்ளடக்கம் சார்ந்த அதனுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண உரையாடல்களை எல்லா தளத்திலும் முதன்மைப் படுத்த வேண்டும் என்றும் சிவில் அமைப்புகளோடு சேர்ந்து முயற்சித்திருக்கிறோம்.

முஸ்லிம்கள் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் இருக்கின்ற சிங்கள மக்களும் தங்களுடைய தேசிய தனித்துவங்களை பேணக் கூடிய வகையில் இந்த வரைபினுடைய உள்ளடக்கம் காணப்படுகிறது. 

வடக்கு கிழக்கில் இருக்கின்ற ஈழத் தமிழர்கள் எவ்வாறு முதன்மைப்படுத்தப்படுகின்றார்களோ? அவ்வாறான முதன்மைப்படுத்தல் முஸ்லிம்களுக்கும், சிங்கள மக்களுக்கும், மலையக மக்களுக்கும் உரித்தாக இந்த வரைவு தனது உள்ளடக்கத்தை கொண்டிருக்கும்” என தெரிவித்துள்ளார்.


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US