ஐக்கிய மக்கள் சக்தியை விமர்சித்த அதே கட்சி எம்.பி
கட்சியின் உயர் பதவிகளில் தேவையான மாற்றங்களைச் செய்யாமல் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முன்னேற முடியாது என்று அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், கட்சியை வெற்றிபெறச் செய்வதற்கு தோல்வியுற்றவர்கள் பதவி விலகி, மற்ற திறமையான உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி சீர்திருத்தப்பட வேண்டும் என்றும், முக்கிய பதவிகளில் உள்ள பல உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
திறமையான உறுப்பினர்கள்
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றி பெற விரும்பினால், இளம் மற்றும் திறமையான உறுப்பினர்களை முன்னணிக்குக் கொண்டுவர அவர் பாடுபட வேண்டும்.
கட்சிக்குள் தங்கள் சொந்த பதவிகளைப் பாதுகாக்க பாடுபடும் சில மூத்த மற்றும் வயதான உறுப்பினர்களின் செயல்களால் ஐக்கிய மக்கள் சக்தி தலைவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




