அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு விடுக்கப்பட்ட சவால்! மீண்டும் நினைவூட்டும் நாமல்
தனது சட்டக் கல்லூரி பரீட்சை தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு விடுத்த சவால் என்னவானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
சட்டத்தரணிகளுக்கான பரீட்சையை சட்டக் கல்லூரியில் முறைகேடாக எழுதியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது அமைச்சர் வசந்த சமரசிங்க சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் வைத்து குற்றம் சுமத்தியிருந்தார்.
சவால்
அதற்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ச , அதனை நிரூபிக்குமாறு சவால் விடுத்திருந்தார்.

அவ்வாறு நிரூபித்தால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் அவ்வாறில்லையேல் அமைச்சர் வசந்த சமரசிங்க தனது அமைச்சுப் பதபதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில் தனது சவால் குறித்து மீண்டும் நாமல் ராஜபக்ச நினைவூட்டியுள்ளார்.
அமைச்சர் வசந்த சமரசிங்கவின் கட்சிக்கு பொதுமக்கள் பாரிய மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். அதனைக் கொண்டு எதனையும் இலகுவாக செய்து கொள்ள முடியும். அவ்வாறிருக்கையில் தான் சவால் விடுத்து மாதங்கள் கடந்தும் மௌனமாக இருப்பது ஏன் என்று நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri