தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் விவகாரம்: தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அறிவுரை
தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினை என்பது அவர்களது கட்சி சார்ந்த விடயம் ஆனால் அந்த விடயத்தில் அவர்கள் ஜனநாயகத்தை பேண வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனநாயகத்தை பேண வேண்டும்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,ஜனநாயகம் என்பது எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும்.மக்களிடமும் கட்சிக்குள்ளும் ஜனநாயகம் இருக்க வேண்டும். அடிமட்ட தொண்டர் முதல் உயர் மட்டம் வரை ஜனநாயகம் இருக்க வேண்டும்.

எனவே தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினையில் ஜனநாயகத்தை பேண வேண்டும்.
மேலும் தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனுக்கு எமது கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam